Tuesday, September 23, 2014

துரோகத்தின் வலி !!!

ஒரு பார்வை... ஒரு சிரிப்பு...
உன்னை அசிங்கமாக உணர்த்தும்...
அது துரோகத்தின் வலி... !!!

Wednesday, August 20, 2014

உன் விழி பார்வையில்.....

உன் விழி பார்வையில்.....

யாரும் மீட்ட முடியாது என்ற
திமிருடன் இருந்தது - என் இதயம்
தொடாமலே இசை காவியம் படைத்தது
                                 - உன் விழி பார்வை !!!

Monday, March 31, 2014

குழம்பியதடி.....!!!

குழம்பியதடி.....
உன் கயல் விழி பார்வையால்....
இதுவரை என்னை பிரிந்திராத...
என் நிழலும்.....இன்று !!!!
குழம்பியதடி.....

Saturday, March 15, 2014

நினைவுகள் இருந்தும் நிழல்களாக !!!

வலிகள் இருந்தும் அமைதியாக...

கோபம் இருந்தும் கோழையாக....

பேராண்மை இருந்தும் பொருமையாக...

கனவுகள் இருந்தும் தூரமாக...

என்னை என்னிடம் இருந்து தொலைத்துக் கொண்டிருக்கிறேன்...

இந்த... சுயநலம் நிறைந்த சமுகத்தில்...

நினைவுகள் இருந்தும் நிழல்களாக... வாழ்ந்துகொண்டிருக்கிறேன்....

- சேது

Wednesday, March 12, 2014

நானும் என்னவளும் !!!

என்னவள் உரிமையுடன் - "என்றும் என்னை பிரியாதே"

நான் அன்புடன் - "நீ என்றும் என் தோளுடன்"

அவளோ சிவந்த விழிகளுடன் - "பிறகு உந்தன் இதயத்தில் தான் யாரோ?"

அவளின் விழி பார்த்து நான் - "என்று என் இதயத்துள் நீ குடி புகுந்தாயோ.... அன்றே அது களவாடப்பட்டது.... உன்னால்...."

நானும் என்னவளும்......

Monday, December 2, 2013

என் அம்மாவுக்காக !!!

எத்தனை ஆயிரம் வானவில் பார்தாலும்
எத்தனை ஆயிரம் தேசங்கள் கடந்தலும்
எத்தனை ஆயிரம் அழகுகள் இருந்தாலும்
நான்
உன் கருவறையில் இருந்து
உன் விழி என்னும் ஜன்னல் வழி
கண்ட உலகுக்கு ஈடாகாது !!!
இரைச்சல் மிகுந்த இந்த உலகில்
எனக்கு அமைதி தந்த இடம் அது....
எத்தனை வயதானால் என்ன...
உன் கருவறை மீண்டும் ஓய்வெடுக்க ஆசையடி  !
உன் மடி சாய்ந்து இவ்வுலகை வெல்ல ஆசையடி !
உன் பாதம் பிடித்து விளையாட ஆசையடி... !
உன்னுடன் மீண்டும் குழந்தையாய் உறவாட ஆசையடி... !
மீண்டும் குழந்தையாய் மாற ஆசையடி... !

                                   என் அம்மவுக்காக அன்பு மகன் சேது

Saturday, October 26, 2013

இன்று நான் !!!

தனிமை
என் வாழ்வில் மீதமிருக்கும் சேமிப்பு
என்றும் என்னுடன் இருக்கும் என் உயிர் நண்பன்
என்னை கொல்ல பிறந்த என் ஒரே எதிரி
இனி !! எதையும் தாங்க செய்த என் வலிமை
இந்த தனிமை